Why Problem / Wrong Decisions

மனிதன் சந்திக்கும் சில பிரச்சனைகளும் அவைகளின் தீர்வுகளும்

மனிதர்களாகிய நாம் இந்த விழுந்து போன உலகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். நமக்குள் இருந்து வரும் பெரும் பிரச்சனை, நமது தவறான தீர்மானத்தினால் நாம் படும் பாடுகளே ஆகும்.

தவறான தீர்மானங்களை குறித்து சற்று அறிந்து கொள்வோமா?

1. தவறான தீர்மானங்கள் (Wrong Decisions)

சற்றும் யோசிக்காமல், திட்டம் செய்யாமல் நாம் ஒரு காரியத்தை செய்ய முனையும் போது அதன் விளைவுகள் நம்மை பெரிய பிரச்சனைகளுக்குள் கொண்டு செல்லும்.

  • ஒரு கட்டிடத்தை கட்ட முயலும் போது, அதை முடிக்க நமக்கு திராணி உண்டா என்று ஆராய வேண்டும். முடியாது என்றால் தீர்மானத்தை கை விட வேண்டும்.
  • ஒரு வியாபாரம் ஆரம்பிக்க தீர்மானிக்கிறீர்களா? யாரோடு கூட்டு சேருகிறீர்கள்? யாருடைய ஆலோசனையை நாடுகிறீர்கள் என்று திட்டமிடாமல் செய்வதால் விபரீத விளைவுகள் ஏற்படும்.
  • திருமணம், வேலை தேடுதல், குடும்ப நிர்வாகம், சமுதாய வாழ்வு ஆகியவற்றில் திட்டமிடாமல் செயல்பட்டால் பிரச்சனைகள் வரும்.
  • பிறர் வாழ்வை ஒப்பிட்டு பார்க்கும் எண்ணம் தவறான தீர்மானத்திற்கு வழிவகுக்கும்.
  • உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்யப்படும் தீர்மானங்கள் பெரும்பாலும் தவறாக முடிவடைகின்றன.

2. உணர்ச்சிகளால் உண்டாகும் தவறான தீர்மானங்கள்

  • பொறாமை
  • பெருமை
  • பயம்
  • கோபம்
  • எரிச்சல்
  • தோல்வி மனப்பான்மை
  • தாழ்வு மனப்பார்வை
  • போராட்டமான மனநிலை
  • குழப்பங்கள்
  • தவறான உணர்ச்சிகள்
  • காம வெறிகள்

இந்த நிலையில் தீர்மானம் செய்யக்கூடாது.

3. ஊக்குவிக்கும் காட்சிகளால் தீர்மானங்கள்

சினிமா, சீரியல் போன்றவற்றில் காட்டப்படும் காட்சிகள் உணர்ச்சிகளை தூண்டி தவறான தீர்மானங்களை ஏற்படுத்தும். மனசாட்சியில் கடவுள் பயம் இல்லாவிட்டால், நமது தீர்மானம் தவறாக அமைய வாய்ப்பு அதிகம்.

4. வேதாகமக் கருத்துகள்

“மாமிசத்தின் படி நடக்கிறவர்கள் மாமிச சிந்தைக்குரியவைகளை சிந்திக்கிறார்கள். ஆவியின் படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாமிச சிந்தை மரணம், ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”

5. கடவுளின் நோக்கம்

நமக்குள் கடவுளுக்கான தெளிவு இருந்தால், நாம் சத்தியத்தை அறிந்து, தவறான தீர்மானங்களைத் தவிர்க்கலாம். அவர் நம் வாழ்வில் நோக்கம், திட்டம், இடம் ஆகியவற்றை முன் தீர்மானித்திருக்கிறார்.

“From one man he made all the nations… — Acts 17:26-27”

தவறான தீர்மானங்களின் விளைவுகள்

1. உடல்நலத்திற்கு எதிரான தீர்மானங்கள்

  • தவறான உணவு பழக்கம்
  • சோம்பேறித்தனம்
  • இரவு நேரத்தில் மொபைல், டிவியில் நேரம் செலவிடுதல்
  • பகலில் தூங்குதல்
  • ஒழுங்கற்ற வாழ்க்கை முறை
  • மதுபானம், புகையிலை பழக்கம்
  • தவறான பாலுறவுகள்

இவை உடல் நலத்தை பாதிக்கின்றன. வாழ்நாளும் குறைகின்றது.

2. பொருளாதார பிழைகள்

  • இருமனம்
  • ஒப்பீடு மற்றும் ஏக்க உணர்வு
  • தேவையில்லாத செலவுகள்
  • ஆலோசனையில்லாமை
  • சேமிப்பு இல்லாமை

விளைவுகள்:

  • கடன் தொல்லை
  • மன உளைச்சல்
  • குடும்ப சீர்குலைவு
  • தற்கொலை எண்ணங்கள்

3. உணர்ச்சிவசமான தீர்மானங்கள்

  • கோபத்தின் விளைவாக செயல்படுதல்
  • தவறான நட்பு மற்றும் தொடர்புகள்
  • போதை மற்றும் குடி பழக்கங்கள்

விளைவுகள்:

  • சட்ட பிரச்சனைகள்
  • குடும்ப பிரிவு
  • தனிமை
  • தண்டனை (சிறை / ஆயுள் / மரணதண்டனை)

நல்ல செய்தி!

உங்கள் தவறான தீர்மானங்களால் நீங்கள் மனம் உடைந்திருக்கிறீர்களா? வாருங்கள், உங்களை படைத்த கடவுளிடம். அவர் உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்லவர்.

“வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” — மத்தேயு 11:28

நிரந்தரமான தீர்வுகள்

  • தவறை ஒப்புக்கொள்வது: தீர்மானங்கள் தவறாக இருந்தன என்பதை மனதளவில் உணருங்கள்.
  • கடவுளை நம்புங்கள்: அவரால் உங்கள் வாழ்க்கை திருந்தும். மனம் அமைதி அடையும்.
  • மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்: அவர் உங்களை மன்னிப்பார். உங்கள் உள்ளம் சமாதானமாகும்.
  • வேதாகமத்தை வாசியுங்கள்: விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆலோசனை கேளுங்கள். வாழ்க்கை முறையை மாற்றுங்கள்.
  • இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்: அவர் உங்கள் மனசாட்சியை உயிர்ப்பித்து, சரியான தீர்மானங்களை எடுக்க உதவுவார்.

வேதாகம உண்மை

“அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய், தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” — ரோமர் 8:28

தேவன் நம்மை தெய்வீக நோக்கத்திற்காக திட்டமிட்டு அனுப்பியவர். நம்மால் அவர் தீர்மானங்களை குலைக்கக்கூடாது. தவறான தீர்மானங்களை தவிர்க்க நாம் அதிக ஜாக்கிரதையுடன் வாழ வேண்டும்.

சிந்தித்து செயல்படுங்கள்!

தவறான தீர்மானத்தைத் தவிர்க்க 7 ஆலோசனைகள்

நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களாயிருப்பிர்களானால், தவறான தீர்மானம் செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த 7 கேள்விகளைக் கேட்டு பதிலை கண்டு படியுங்கள். உங்கள் தீர்மானம் தேவசித்தமாக மாறும். தவறு செய்ய வாய்ப்பே இல்லை.

1. என் தீர்மானத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறது?

🌿 சங்கீதம் 140:8

Is my decision or plan in agreement with God’s word?

2. இந்த திட்டத்திற்காக நான் ஜெபிக்க முடியுமா?

Can I pray for God‘s help for this decision?

3. தெய்விக சமாதானம் உங்கள் இருதயத்தை ஆட்கொள்கிறதா?

🌿 ஏசாயா 26:3

If it’s God’s plan, you’ll experience divine peace.

4. உங்கள் மனச்சாட்சி இதைக் குறித்து நற்சாட்சி கொடுக்கிறதா?

🌿 2 கொரிந்தியர் 1:12

Is your conscience giving a good testimony regarding your decision?

5. இந்தத் தீர்மானம் உங்களை தேவனை விட்டுப் பிரிக்கிறதா?

🔍 உதாரணம்: யூதாஸ்காரியோத்து (Judas Iscariot)

Is your decision separating you from God?

6. இந்த தீர்மானத்தின் விளைவு தேவனிடம் இருந்து வருகிறதா?

📖 அப்போ. 5 ஆம் அதிகாரம் — அனனியாஸ் மற்றும் சப்பீரா

Is the consequence from God?

7. உங்கள் தீர்மானத்தின் மூலம் தேவன் மகிமைப்படுவாரா?

🌿 மத்தேயு 5:17

Is God magnified and exalted because of your decision?

அவரது நாமம் நம் மூலம் பரிசுத்தப்படுவதாக!

உங்கள் மூலம் தேவநாமம் தூஷிக்கப்பட உங்கள் தீர்மானங்கள் இடம் கொடுக்க வேண்டாம்.

சிந்தித்து தீர்மானம் செய்யுங்கள்!