Who is Jesus?
Who is God? கடவுள் யார்?
கடவுள் யார்? கடவுள் இருக்கிறாரா? இருக்கிறாரென்றால் எவ்வாறு இருக்கிறார்? அவரைப் பார்க்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் தொன்று தொட்டு மனிதனால் கேட்கப் பட்டு வருகின்றன. ... உண்மையான கடவுள் யார் என்பதைக் குறித்து சரியான அறிவு மிகவும் அவசியம். கடவுள் சகலத்தையும் ஆளுகை செய்பவர். சகலத்தையும் படைத்தவர்.
- சர்வவியாபகர் (Omnipresent)
- அனைத்தும் அறிந்தவர் (Omniscient)
- சர்வவல்லவர் (Omnipotent)
கடவுள் தன்னில் தானே இயங்குபவர். நேற்றும், இன்றும், என்றும் இருப்பவர். ... அவர் ஞானத்திலும், உண்மையிலும் சிறந்தவர். ... மனிதனை தேடிவந்த தெய்வமே தெய்வம்;. அவ்வாறு மனிதனாக வந்த தெய்வத்திற்கு ஒரு ரூபம் உண்டு ஒரு பெயரும் உண்டு. அவர் தான் இஸ்ரவேல் தேசத்தில், யூதேயா நாட்டில் பெத்லகேம் என்னும் சிற்றூரில் மனு உரு ஏற்ற இயேசு கிறிஸ்து. ...
இயேசு கிறிஸ்து யார்?
கடவுள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சரித்திரத்தில் நுழைய திட்டம் செய்கிறார். ... பாவ பரிகாரமாக ஒரு மனிதனின் இரத்தம் சிந்தப்படவேண்டும். ... எனவே நாம் பாவிகளாயிருக்கையில் தமது அன்பினால் மனுக்குலத்தை மன்னிக்கும்படி, இரத்தம் சிந்த வந்த கடவுளின் பெயரே இயேசு. ...
ஏற்கனவே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம்:
- பிறப்பிடம், கன்னிப்பிறப்பு, முன்னோடி, ஊழியம், போதனைகள், புறக்கணிப்பு, சீடனால் காட்டிக்கொடுக்கப்பட்டது, பொய் சாட்சிகள், இரு கள்ளர்கள் நடுவில் சிலுவை, செல்வந்தனின் கல்லறை, உயிர்த்தெழுதல், பரமேறுதல் – அனைத்தும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின.
மேற்கூறிய தீர்க்கதரிசன வசனங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவே கடவுளாக மனு உரு ஏற்ற மனிதர் என்பதை உறுதிப்படுத்தி விட்டன. ...
இயேசு கிறிஸ்துவே தன்னை யார் என்று சொல்லுகிறார்:
- ஜீவ அப்பம் நானே – யோவான் 6:35
- உலகத்தின் ஒளி நானே – யோவான் 8:12
- நானே வாசல் – யோவான் 10:9
- நானே நல்ல மேய்ப்பன் – யோவான் 10:11
- உயிர்த்தெழுதலும், ஜீவனும் நானே – யோவான் 11:26
- நானே வழி, சத்தியம், ஜீவன் – யோவான் 14:6
- நானே மெய்யான திராட்சைச் செடி – யோவான் 15:1
- நானும், பிதாவும் ஒன்று – யோவான் 14:11
- என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் – யோவான் 14:9
- நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள் – யோவான் 14:11,20
- தன்னை வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பம் என்று குறிப்பிடுகிறார் – யோவான் 6:51-58
- தன்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே வானத்திலிருந்து இறங்கி வந்தேன் – யோவான் 6:38
- ஆண்டவரும் போதகரும் நானே – யோவான் 13:14
இயேசு கிறிஸ்துவைக் குறித்து முன் அறிவித்தபடியே யாவும் நடந்தபடியால், அவரைக் குறித்து சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையிலும் உண்மை.
... இயேசு கிறிஸ்து தான் மனுக்குலத்தை பாவத்திலிருந்தும், அழிந்து போகும் இவ்வுலகத்திலிருந்தும் காப்பாற்ற வந்த உண்மையான கடவுள் என்பதுவே சத்தியம். (The Truth)
JESUS – THE LORD
இயேசுவே ஆண்டவர். இயேசுவே கடவுள். ... இறைவனே ஆட்சி செய்வதென்றால் ஊரையோ, உலகத்தையோ அல்ல. அவர் படைத்த மக்களை ஆளுகை செய்ய விரும்புகிறார். ...
- மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தும் இறைவனின் கட்டுப்பாட்டிற்கும் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் திட்டம்.
- மனிதன், தன்னைத் தானே ஆளுகை செய்ய விரும்புகிறான். ... கடவுளால் ஆளப்படுவதை மனிதன் தெரிந்தெடுத்தால் சரியான முடிவுகளை அவன் எடுப்பான்.
மனம் ஆண்டவரண்டை திரும்ப வேண்டும். தன் பொல்லாத வழிகளை குறித்து வருத்தமடைய வேண்டும். தவறுகளுக்காக கடவுளிடம் பாவ அறிக்கை செய்ய வேண்டும். ஆண்டவரை தங்கள் இருதயமாகிய சிங்காசனத்தில் வைக்க வேண்டும். கடவுள் மட்டுமே நம் வாழ்வை ஆதிக்கம் செய்ய விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளர வேண்டும்.
இயேசு கிறிஸ்து என்றால் இயேசுவே ஆண்டவர். அபிஷேகம் பண்ணப் பட்டவர். படைப்புகளுக்கு படைப்பாளராகிய தாமே ஆண்டவரும், போதகரும் என்று வெளிப்படுத்த வந்தவர். ...
JESUS – THE SAVIOUR
ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார். ... இரட்சிப்பு கர்த்தருடையது : கடவுளின் அன்பு அளவற்றது. ... மனிதனைக் காப்பாற்றும் இரட்சகர் இயேசு என்னும் தேவகுமாரன் மட்டுமே. ...
- இயேசுவே பாவத்திலிருந்து காப்பாற்றும் இரட்சகர்!
- இயேசுவே சாபத்திலிருந்து காப்பாற்றும் இரட்சகர்
- இயேசுவே மரணத்தின் மேல் வெற்றி பெற்று மனுஷனையும் உயிர்ப்பிக்கச் செய்யும் இரட்சகர்.
- இரட்சிப்பு இலவசம் - ஆனால் அவசியம்! இரட்சகர் இயேசு மட்டுமே – அதுவே சத்தியம்.