பொருளாதாரப் பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதாரப் பிரச்சனைக்கும் அநேக அடிப்படை காரணங்கள் உண்டு.

சில காரணங்கள்:

இவை இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் தேவையில்லாத பொருட்களை வாங்கி பொருளாதார பிரச்சினையில் விழும் குடும்பங்கள் ஏராளம்.

பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காவிட்டாலும், செல்லம் கொடுத்து, கேட்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதாலும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்.

ஞானம் தேவை. உலக ஞானம் போதாது. பரத்திலிருந்து வரும், தேவபயத்தோடு கூடிய ஞானம் இல்லையென்றால் சுயபுத்தியை சார்ந்து செயல்படும் எவரும் பொருளாதார பிரச்சனையில் நிச்சயமாக சிக்கிக் கொள்ள நேரிடும்.

சில சமயங்களில் குடும்பப் பொறுப்புகள், எதிர்பாராத இழப்புகள், அரசாங்கம் போடும் திடீர் சட்டங்கள், வேலை இழப்பு இவைகளும் பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கும்.

பொருளாதார பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது:

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கி, சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும்.”

இயேசு இரண்டு காசு காணிக்கை போட்ட ஏழை விதவையைப் பற்றி புகழ்ந்தார். காரணம், அவள் தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்திற்குரியதெல்லாம் கொடுத்தாள்.

தான தர்மம் செய்யும் போதும், சுய விளம்பரத்திற்காக செய்யாமல், “வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது” என்ற வேத வாக்கின்படி செய்ய வேண்டும்.

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவர் அதனை திருப்பித் தருவார். (நீதி மொழிகள் 19:17)

உதாரத்துவம் இல்லாமல் பிசினித்தனம் செய்தால் வறுமை வரும். அதேசமயம், “உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்” என்பது உண்மை.

இதன் இறுதி தீர்வு

இருக்கும் பொருளைக் காத்துக் கொண்டு, வீண் இழப்புகளைத் தவிர்க்க தேவ ஆலோசனையும், கடவுள் தரும் ஞானமுமே மிகவும் அவசியம்.

வேதாகமத்திலிருந்து பொருத்தமான ஆலோசனைகள்

“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதிமொழிகள் 10:22)